பாம்புகள் என்றாலே பெருப்பாலான மனிதர்கள் அச்சமடையத்தான் செய்வார்கள். ஆனால் இந்த பாம்புகள் எலிகள் மற்றும் பூச்சிகளை உண்பதன் மூலம் மறைமுகமாக விவசாயத்திற்க்கு உதவி செய்கிறது. பாம்புகளின் கொடிய விஷம் காரணமாக சில நேரங்களில் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.

உலகில் அதிகம் விஷத்தன்மை கொண்ட 3 கொடியவகை பாம்புகளை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம். 

Philippine Cobra  

பயங்கரமான பாம்பு என்று நம்மை அச்சமடைய வைப்பதில் , உலகில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பாம்பு இதுதான். சுமாராக 3 மீ்ட்டர் துாரம் வரை(10அடி) தன் இடத்தை ஆளும், வல்லமை கொண்டதால், இது பிறரைப் பெரிதும் அஞ்ச வைக்கின்றது. இந்தவகை பாம்பு கடித்தால் 30 நிமிடங்களுக்குள் மரணம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.  

Black mamba


இந்தவகை பாம்புகள் தான் உலகின் அதிக விஷமுள்ள பாம்புகளாக காணப்படுகிறது. ஒரு யானையை சில மணி நேரங்களில் கொல்ல கூடிய விஷ தன்மை கொண்டது.

அதிக பட்சம் 4.3 மீ. நீளம் வரை காணப்படும் Black mamba ஆபிரிக்ககாவின் மிக ஆபத்தான பாம்பாகும். மிக வேகமாக ஓடக்கூடியதும், அதிக விஷம் கொண்டிருப்பதும் இதன் தனித்தன்மையாகும்.

Blue Krait


இது இன்னொரு ஆபத்தான பாம்பு.. இதற்கு Malayan Krait என்று இன்னொரு பெயரும் உண்டு. இது தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்துக்குரிய ஒரு விஷப் பாம்பினமாகும். அதிக விஷம் கொண்ட இந்த இனப் பாம்புகள் மலேசியாவிலும், வியட்னாமிலும், தாய்லாந்து, சுமத்திரா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் காணப்படுகின்றன.   

மூர்க்கத்தனம் கொண்ட இந்தப் பாம்புகள் இரவு நேரத்தில் வேட்டையடுகின்றன. இந்த பாம்புகள் ஒரு தடவை தீண்டினால் வெளிவரும் விஷம், பத்து வளர்ந்த மனிதர்களை கொல்லக்கூடிய தன்மைக் கொண்டது.