கனேடிய மாகாணம் ஒன்றில் இரத்தத்தை உறிஞ்சும், பாம்பு போன்ற உருவத்தில் ஒரு வகை மீன்கள் மக்கள் கண்களில் தென்பட்டன.
இரத்தக் காட்டேரி மீன் அல்லது sea lamprey என்று அழைக்கப்படும் அந்த மீன்கள், New Brunswick மாகாணத்திலுள்ள நீர் நிலைகளில் கூட்டம் கூட்டமாக உலாவரத் துவங்கியுள்ளன.
அதை பார்த்த மக்கள் பதட்டம் அடையவே, அரசு தரப்பில் ஆய்வு மேற்க்கொண்ட போது இந்த வகை மீன்கள் இரத்தத்தை உறிஞ்சும் வகையை சேர்ந்தவை, இந்த மீன்கள் இனபெருக்கத்திற்க்காக வெளியில் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த வகை மீன்கள் இனபெருக்க காலத்தில் உணவு எதையும் உண்ணாது. அவை உணவு உட்கொள்ள நினைத்தாலும் அவற்றால் உணவு உட்கொள்ள முடியாது என்கிறார் மீன்வளத்துறையைச் சேர்ந்த Marc Gaden.
அவற்றின் குறிக்கோள் எல்லாம், ஒரு துணையைத் தேடிக்கொள்ளவேண்டும், இனப்பெருக்கம் செய்யவேண்டும் என்பதில் மட்டுமே இருக்கும் என்கிறார் அவர்.
மற்றொரு உயிரினத்தைத் தனது வாயிலுள்ள கூர்மையான உறிஞ்சும் உறுப்புகளால் பற்றி பலமாக பிடித்துக்கொள்ளும் இந்த மீன்களால், அந்த உயிரினத்தின் சதையை திரவமாக்கி உணவாக்கி உட்கொள்ள முடியும்.
இன்னொரு நல்ல செய்தி என்னவென்றால், இந்த மீன்கள் வெப்ப இரத்தம் கொண்ட பிராணிகளை, அதாவது இப்படிச் சொல்லலாம், அது மனிதர்களின் இரத்தத்தை உறிஞ்சி உணவாக உட்கொள்ளாது!
0 Comments
கருத்துரையிடுக